பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332


கிறார். எனக்கு எழுதும் கடிதங்கள் பலவற்றையும் இவர் கவிதை யாகவே எழுதுவார். என்னுடன் ஆண்மீக உறவு கொண்டுள்ள நண்பர்களில் இவரும் ஒருவர்.

கே. ஆர். சீதாராமன்

குமாஸ்தாவின் பெண் நாடகத்திற்கு அமோகமான ஆதரவு கிடைத்தது. அப்போது எங்கள் குழுவில் முக்கிய பெண் வேடங்களைப் புனைந்து வந்தவர் கே. ஆர். சித்தாராமன் என்ற இளைஞர். இவர் நன்றாகப் பாடும் திறமையுடையவர். மிகுந்த சுறுசுறுப்புள்ளவர். குமாஸ்தாவின் பெண்ணில் கதா நாயகி சீதையாக இவர் நடித்தார். ரசிகர்களில் பலர் இவரைப் பெண்ணென்றே எண்ணி ஏமாற்றம் அடைந்தனார். எல்லா நாடகங்களிலும் கதாநாயகியாக இவர் திறம்பட நடித்தார். எனக்கு மகளாகவும், மனைவியாகவும், மாதாவாகவும் நடித்த பெருமை இவருக்குண்டு. நடிப்பதில் மட்டுமல்ல, நாடகத்தை மேடையில் உருவாக்குவதிலும் இவருக்கு நிறைந்த ஆற்றல் உண்டு. எங்கள் நாடகக் குழுவில் சட்டாம்பிள்ளை ஸ்தானத்தில் இவர் நீண்ட காலம் பணி புரிந்திருக்கிரு.ர். நாடகம் சிறப்பாக நடைபெற வேண்டு மென்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர். பெண்களே பெண் பாத்திரங்களை நடிக்கத் தொடங்கியபின் பல் வேறுப்பட்ட ஆண் பாத்திரங்களையும் தாங்கி நடித்துப் புகழ் பெற்றார் இவர்.

1948இல் நாங்கள் கோயமுத்துTரில் இருந்தபோது பில்ஹணன் படப்பிடிப்பிற்காக நான்இரவு நேரங்களிலும் ஸ்டுடியோ வில் இருக்க நேர்ந்தது.அந்தச் சமயங்களில் சேர்ந்தாற்போல் பதி னேந்து நாட்கள் எனக்குப் பதில் ஒளவையார் வேடத்தை, சீதா ராமன் ஏற்றுத் திறம்பட நடித்தார். நானே சிலநாட்கள் அவரது ஒளவையார் நடிப்பைச் சபையில் வீற்றிருந்து பார்த்து பெருமிதம் அடைந்தேன். 1955இல் நாங்கள் தயாரித்த இராஜராஜ சோழன் நாடகத்தில் கதானாயகன் வீர விமலாதித்தனாக நடித்து மங்காத புகழைப் பெற்றார் கே. ஆர். சீத்தாராமன். இவருடைய நாடக நடிப்பினைப் பாராட்டித் தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கம் இவருக்குக் கலைமாமணி என்ற விருதினை வழங்கியுள்ளது.