பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

387


நாடகம் இடைவிடாது நூறு தினங்களுக்கு மேல் நடை பெற்றதே இந்நாடகத்தின் சிறப்பைப் பன்மடங்கு உயர்த்துகின்றது.

இதில் நடிக்கின்ற எல்லா நடிகர்களும் மிகவும் திறமையுடன் அவரவர்கள் பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்தது இனிது பாராட்டத்தக்கது. மேலும் இவர்கள் பாடும் ஒவ்வொரு பாடலும் எளிதில் சகல மக்களும் உணருமாறு இனிமையாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான வருஷங்களில் முன் நடைபெற்ற சிவபெருமானின் லீலைகளை இன்னும் மக்கள் பக்திரசத்துடன் கண்டு களித்து ஆனந்தத்துடன் அனுபவிக்கவும், இச்சபையினார் தங்கள் நாடகங்கள் மூலமாய் தமிழ் இசைக்கும், தமிழ்க்கலை வளர்ச்சிக்கும் செய்யுந் தொண்டு மிக மிக போற்றற்பாலது.

Mr J M Dogk, Managing Dircetor, The Madura Mills Co. Ltd, Madura.

Mrs. Doak and I are greatful to Messrs T. K. S. & Bros. for giving us an opportunity to attend the Centenary Celebration of the Drama ‘Sive Leela’ Yesterday.

it was an amazing exparence, for Surpassing any othar Tamil Drama we have everseen. The stagecraft, settings, Costumes & above all the spirited acting breathed the spirit of Madura. Madura is fortunate in having such talent & trust Messrs T. K. S. & Bros. will go on here from Success to Success

இத்தகைய பெருமைக்குரிய வாழ்த்துக்களை யெல்லாம் நாங்கள் பெருவதற்கு எங்கள் அருமைச் சகோதரர் திரு. சுந்தர சர்மா அவர்கள் முன்னின்று பாடுபட்டார் என்பதை நன்றியோடு குறிப்பிட விரும்புகிறேன். அன்றிரவே மீனட்சியம்மன் ஆலயத்திற்கு எங்கள் நால்வரையும் மேள தாளத்தோடு வரவேற்று, பத்வட்டம் கட்டிச் சிறப்புகளைச் செய்தனார். இப்பெரு முயற்சியில் ஆலய நிர்வாக அதிகாரி ஆர். எஸ். நாயுடுவும், அதிகார பாரபரிதியம் சுந்தர சர்மாவும் முன்னின்று உழைத்தனார். ஒரு நாடகம். ஒரே நாடக அரங்கில் தொடர்ந்து 108 நாட்கள் நடைபெற்றது இதுவே முதல் தடவையென்று எல்லோரும் பாராட்டினார்கள். சிவலீலா நாடகம் தொடங்கிய அன்று திரைப்பட முறையைப்