பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

526


கள்,” என்றார், கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியும் எனக்காக இராஜஜியிடம் பரிவுரை செய்தார். அதன் பிறகு இராஜாஜி “அப்படியானால் ஏன் நிகழ்ச்சியில் சேர்க்கவில்லை?” என்று சொல்லிக்கொண்டே “சரிசரி, பாடுங்கள்,” என்றார். நான் ‘மைக்’ கின் முன்னால் வந்து நின்றவுடனே என்னையறிந்தரசிகர்கள் கையொலி எழுப்பினார்கள். நான் உணர்ச்சிப்பிழம்பாக நின்றேன்.

ஜெய பேரிகை கொட்டடா
கொட்டடா கொட்டடா (ஜெய)

உச்சத்தில் குரலெழுப்பிப் பாடினேன். வெள்ளம்போல் இருந்த மக்கள் கூட்டம் மந்திர சக்தியால் கட்டுண்டதுபோல் நிசப்தமாக இருந்தது. பாட்டு முடிந்ததும் கடலலைபோல் கரவொலி எழுந்தது. நான் சபையை வணங்கிவிட்டுத் திரும்பியதும், தலைவர் இராஜாஜி “மிகநன்றாகப் பாடினீர்கள், இனி யாரும் பேசவோ பாடவோ வேண்டியதில்லை. நன்றி உரை மட்டும் போதும்,” என்றார்.... ...

அன்று மாலையிலேயே புறப்பட்டுத் திண்டுக்கல் வந்து சேர்ந்தோம்.

ஜனசக்தி நாளிதழாக வர ரூ. 5000

திண்டுக்கல்லில் முள்ளில்ரோஜா நாடகம்பார்ப்பதற்காக தோழர் ஜீவானந்தமும் வந்திருந்தார். அவரோடு நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். ஜனசக்தி வார இதழை நாள் இதழாகக் கொண்டு வரத் தீவிர முயற்சிகள் செய்வதாகவும், குறிப்பிட்ட ஒரு அச்சு இயந்திரத்தை வாங்குவதற்கு ரூ. 5000 தேவைப்படுகிறதென்றும், அந்தத் தொகையைக் கடனாகக் கொடுத்தால் இரண்டு மாதத் தவணையில் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் கூறினார். அப்போது எங்களுக்குப் பண நெருக்கடி அதிகம். கோவை ஷண்முகா தியேட்டர் இன்னும் கட்டி முடியவில்லை. அதற்கு எங்கள் பங்குத் தொகையைக் கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் போட்ட திட்டத்தைவிட ஷண்முகா தியேட்டர் அதிகமான தொகையை விழுங்கிக் கொண்டிருந்தது. பில்ஹணன் படப்பிடிப்பும் திட்டமிட்டபடி விரைவில் முடியவில்லை. ஆறு மாதத்தில் படத்தை