இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
560
ஏறத்தாழ ஒராண்டுகாலம் கோவையில் நாடகங்கள் நடித்தோம். பில்ஹணன் படம் எடுத்து முடிக்கப் பெற்றது. சமூக நாடகங்கள் மூன்றும், வரலாற்று நாடகம் ஒன்றும் ஆக நான்கு புதிய நாடகங்கள் தயாராயின.
தலைநகராகிய சென்னை மாநகருக்கு வந்து நாடகங்கள் நடத்த வேண்டுமென்று பேரறிஞர் அண்ணா, திரு. நாரண துரைக் கண்ணன், பேராசிரியர் வ.ரா., சொல்லின்செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை, தலைவர் ம. பொ. சி. முதலிய பல அறிஞர்கள் எங்களை அடிக்கடி வற்புறுத்தி வந்தனார். எல்லோருடைய விருப்பத்தையும நிறைவேற்றும் நோக்கோடு, 19-8-48 இரவு கொச்சி எக்ஸ்பிரசில் தலைநகராகிய சென்னை மாநகருக்குப் பயணமானோம்.