பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான் இயற்றிய பாடல்கள்

348

இயற்றினேன். என் சிறிய தந்தையார். “உருப்படியாக ஏதாவது பாடு” என்று சொன்னார்.

முதலில் கலைமகள் விஷயாமாகச் செய்யுட்களை இயற்றத் தொடங்கினேன். நான் சொல்லச்சொல்ல என் சிறிய தந்தையார் எழுதி வந்தார். சில வெண்பாக்களையும் சில கட்டளைக் கலித்துறைகளையும் இயற்றினேன்.

“உள்ளக் கவலைக் யெலாமுரைத் தேனுக் குவந்தருள
மெள்ளக் கவினன மீதிவர்ந் தேவர வேளையிதே
கள்ளக் கயவர்க் கருமமு தேகலைக் கற்பகமே
வள்ளக் கமல மலர்மீதில் வாழும் மனோன்மணியே”

என்பது அவற்றில் ஒன்று. இவ்வாறு பாடல்களை இயற்றி வந்தபோது என் மனத்துள்ளே ஒரு பெருமிதமுண்டாகும். என் சிறிய தந்தையார் அவ்வப்போது நன்றாயிருக்கிறதென்று பாராட்டுவார்.

திருவேரக மாலை

அப்பால் சுவாமிமலையிலுள்ள முருகக் கடவுள் விஷயமாகப் பதினாறு கட்டளைக் கலித்துறைகளை இயற்றினேன். உயர்ந்த சாஸ்திரக் கருத்துக்களோ, கற்பனைகளோ அப்பாடல்களில் அமையவில்லை. என்னுடைய அனுபவம் சிறிது; பழக்கமும் குறைவு. அந்த அளவில் எத்தகைய கருத்துக்கள் இருக்குமோ அவைகளையே அப்பாட்டில் காணலாம்.

பலவகையான துன்பங்களில் புண்பட்டவன் நான்; ஆதலின், அத்துன்பங்களிலிருந்து விடுபட வேண்டுமென்று என் மனத்துள் இருந்த ஆவல் திருவேரகச் சண்முகப்பிரானை நோக்கி நான் கூறிய பிரார்த்தனையில் அங்கங்கே புலப்படும்.

“ஆடும் அரவிற்கு நேராகச் சீறும் அவரையகன்
றீடொன் றடியர்க ளோடென்று மேவி யிருப்பவருள்
நாடு மிருவர் தமக்கரி யானரு ணாததுயர்
சாடும் புனற்பொன்னி சூழ்திரு வேரகச் சண்முகனே”

சண்முகப்பிரான் ஞாபகத்தோடு ஆறுமுகத்தா பிள்ளையின் ஞாபகமும் எனக்கு அப்போது இருந்ததுதான் இத்தகைய கருத்துக்கள் எழுதுவதற்குக் காரணமாகும்.

ஆனந்தவல்லி பஞ்சரத்தினம்

இச்செய்யுட்களை எல்லாம் எழுதிய என் சிறிய தந்தையார், “இந்த ஊர் அம்பிகைமேல் ஏதேனும் பாடலாமே” என்று சொல்லவே நான் அவ்வாறே ‘ஆனந்த வல்லியம்மை