பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/802

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

775

4-8-1938 ஆந்திர யூனிவர்ஸிடி தமிழ் போர்டில் மெம்பர் ஸ்தானத்தை ஒப்புக்கொண்டது. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்தை எழுதி வெளியிட்டது.

1935 எண்பதாவது ஆண்டு நிறைவு விழா நாடு முழுவதும் கொண்டாடப் பெற்றமை.

1937 குறுந்தொகைப் பதிப்பு.

16-1-1087 குடந்தை, கோபாலராவ் நூல் நிலையத்தில் ஐயரவர்கள் படத் திறப்பு

6-2-1937 சநாதன தர்ம மகா நாட்டில் கலந்து கொண்டது.

27- 8-1987 பாரதீய ஸாஹித்ய பரிஷத் - மகாத்மா காந்தி தலைமை வரவேற்புரை நிகழ்த்தியது. மகாத்மா காந்தியுடன் உரையாடல்.

11-1-1938 சென்னையில் வைஸ்ராய் நடத்திய விருந்தில் கலந்துகொண்டது.

15-8-1938 ஆக்ஸ்போர்டு ஸம்ஸ்கிருத ஆசிரியர் பிரசங்கத்திற்குச் சென்றது. மணிமேகலையைப் பற்றிப் பாராட்டிப் பேசினார்கள்.

1-8-1939 கொப்பனாப்பட்டிக் கல்லூரித் திறப்பு விழாவில் முன்னுரை

25-11- 1939 செவ்வைச்சூடுவார் பாகவதம் குறிப்புரை எழுத ஆரம்பித்தது.

28-11-1939 டி.கே.ஸி. அவர்களும், கல்கி அவர்களும் வீட்டிற்கு வந்து உரையாடினர்.

7-12-1989 ஹிந்து மத்திரிகை வைரவிழா வாழ்த்து

15-12-1939 கல்கி அவர்களிடம் ஆனந்தவிகடன் பத்திரிகையில் வெளியிட 'சுய சரிதம்’ முதல் அத்தியாயம் எழுதிக்கொடுத்தது.

மார்ச்சு 1940 ஸ்டான்லி மருத்துவமனையில் சஸ்திர சிகிச்சை பெற்றது.

12-6-1940 கூத்தனூர் கலைமகள் விஷயமாகப் பாடல்கள் எழுதி அனுப்பினமை.

5-8-1941 தமிழிசையைப் பற்றி டைகர் வரதாசாரியாருக்கு அபிப்பிராயத்தை எழுதியனுப்பியது.

29-9- 1941 திருச்சி ரேடியோவில் 'எது தமிழ்' என்பது பற்றி ஒரு பேச்சு.