நாடக பாத்திரங்கள்
பக்காத் திருடன்
பலே திருடன்
}
இரண்டு திருடர்கள்
அப்பரசாமி முதலியார் ...
ஒரு மிட்டாதார்
தாண்டவராயப் பிள்ளை ...
ஒர் தலையாரி
காலம் :—காலை.
பலே. அண்ணா, — அப்போ நாளைக்கி — காலமே எனக்கு— ஊருக்கு போவ— உத்தரவு கொடுக்கரைங்களா ?
பக்: இதுக்குள்ள என்ன தம்பி அவசரம்? இன்னம் ரெண்டு மூணு நாளு இருந்துட்டு போவரது தானே?
பலே. வந்து ஒரு வாரமாச்சு, —சும்மாயிருக்கிறது இண்ணா—பொழுது போவலே –நாளேக்கி காலமே போவ கொஞ்சம் உத்தரவு கொடுங்க—
பக்: இல்லே—தம்பி—உன் மனசுலே-என்னமோ யிருக்குது—சொல்லு ஒளிக்காதே
பலே. இல்லே—அண்ணா— இந்த ஊருக்கு நான் வந்ததே நம்போ தொழில்லே ஏதாவது-புதுசா கத்துகினு போவணு மிண்ணு; ஒரு வாரமா பாக்கரேன்-நான் கத்து கிறத்துக்கு இங்கே ஒண்ணையும் காணோம் — நானு இங்கே யிருக்ரவங்களுக்குக் கத்துகொடுக்கணும் போலெயிருக்குது —அத்தொட்டு என் ஊருக்கு திரும்பிப் போகலாமிண்ணு பாக்கறேன்.