பக்கம்:என் தந்தை தாயர்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஏமாந்த இரண்டு திருடர்கள்
நாடக பாத்திரங்கள்

பக்காத் திருடன்
பலே திருடன்

}

இரண்டு திருடர்கள்


அப்பரசாமி முதலியார் ...

ஒரு மிட்டாதார்

தாண்டவராயப் பிள்ளை ...

ஒர் தலையாரி

தலையாரியின் இரண்டு ஆட்கள்


முதல் அங்கம்


முதற் காட்சி
இடம்:—பக்காத்திருடன் வீட்டில் ஒர் அறை.

காலம் :—காலை.

பக்காத் திருடனும், பலே திருடனும்,உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.

பலே. அண்ணா, — அப்போ நாளைக்கி — காலமே எனக்கு— ஊருக்கு போவ— உத்தரவு கொடுக்கரைங்களா ?

பக்: இதுக்குள்ள என்ன தம்பி அவசரம்? இன்னம் ரெண்டு மூணு நாளு இருந்துட்டு போவரது தானே?

பலே. வந்து ஒரு வாரமாச்சு, —சும்மாயிருக்கிறது இண்ணா—பொழுது போவலே –நாளேக்கி காலமே போவ கொஞ்சம் உத்தரவு கொடுங்க—

பக்: இல்லே—தம்பி—உன் மனசுலே-என்னமோ யிருக்குது—சொல்லு ஒளிக்காதே

பலே. இல்லே—அண்ணா— இந்த ஊருக்கு நான் வந்ததே நம்போ தொழில்லே ஏதாவது-புதுசா கத்துகினு போவணு மிண்ணு; ஒரு வாரமா பாக்கரேன்-நான் கத்து கிறத்துக்கு இங்கே ஒண்ணையும் காணோம் — நானு இங்கே யிருக்ரவங்களுக்குக் கத்துகொடுக்கணும் போலெயிருக்குது —அத்தொட்டு என் ஊருக்கு திரும்பிப் போகலாமிண்ணு பாக்கறேன்.