பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

133

சாபம் அளித்திருந்தான். கடல் கடந்த நாட்டில் பிறந்து, கலம் ஏறித் தன்னை நோக்கி வந்த தன் மகன் இடைவழியில் கலம் கவிழக் கடலில் வீழ்ந்து காணாது போயினன் என அறிந்த புகார் நகர் வேந்தன் வடிவேற் கிள்ளி, வருத்த மிகுதியால் விழா வெடுக்காது விடுத்தனாகப் புகாரைக் கடல் விழுங்கிற்று.28 இந்திர சாபம் உண்டோ, இல்லையோ புகார் இன்று இல்லை. அன்று புகார் இருந்த இடத்தில் இன்று, கடல் தன் ஆட்கி செலுத்துகிறது. புகார் மறைந்த மாநகரமாகி விட்டது.


சான்றெண் விளக்கம்

1. சம்பு என்பாள் சம்பாபதியினள்
செங்கதிர்ச் செல்வன்,திருக்குளம் விளக்கும்
கஞ்ச வேட்கையின் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனாது
காகம் கவிழ்த்த காவிரிப்பாவை .....
என் பெயர்ப்படுத்த இவ்விரும்பெயர் மூதூர்
நின்பெயர்ப்படுத்தேன் நீவாழிய என”

-மணிமேகலை : பதிகம்:8-31

2. “சுகந்தன் காத்தல் காகந்தி என்றே
இயைந்த நாமம் இப்பதிக்கு இட்டு”

-மணி :22: 37-38.

3. “பொதியிலாயினும், இமயமாயினும்,
பதியெழுவு அறியாப் பழங்குடி கெழீஇய”

- சிலம்பு; 1 : 14-19