பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

என் தமிழ்ப்பணி



12. “நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்
காலின்வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும், குணகடல் துகிரும்,
கங்கை வாரியும், காவிரிப் பயனும்
ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்,
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம் தலை மயங்கிய தினந்தலை மறுகு”

-பட்டினப்பாலை 185-193

13. -சிலம்பு : 5.40-58

14. “மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும்
மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்
அவத்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்தோங்கு மரபின் தோரண வாயிலும்”

-சிலம்பு 4:5:99-104.

15. வம்பமாக்கள் தம் பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த, எண்ணுப் பல் பொதிக்
கடைமுக வாயிலும் கருத்தாழ்க் காவலும்
உடையோர் காவலும் ஒர் இயவாகிக்
கட்போர் உளர்எனின், கடுப்பத் தலை ஏற்றிக்
கொட்பினல்லது கொடுத்தல் ஈயாது
உள்ளுநர்ப் பணிக்கும் வெள்ளிடை மன்றம்”

-சிலம்பு : 5:111-117