பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? (? லா, ச. ராமாமிருதம்

என்னடா சொல்றே மது? இவள் யாருடா?’’

நான் அவளைக் கையமர்த்துகிறேன்.

நீ யார் என்று கேட்க எனக்குத் தேவையில்லை. ஏற் கனவே உன் பிம்பம் காட்டி, சூசகம் காட்டியிருக்கிறாய். நீ வரப்போகும் அடையாளமாய் என் நெஞ்சின் சருகின்மேல் நடந்து சென்றிருக்கிறாய். அவ்வளவுதான். ஆனால் அதுவே எனக்குத் தாங்கவில்லை.

அப்பா; அழாதேங்கோப்பா தேம்பினான். என் னால் முடியவில்லை. ’

உஷ்! மகனே, இது அழுகையில்லை. அருவிஸ்ணானத் தில் என் அழுக்குகள் கழுவப்பட்டு துல்லியமாகிக்கொண் டிருக்கிறேன்.

நீ லலிதாம்பிகை. நீ ராஜ ராஜேஸ்வரி. நீ கன்யாகுமாரி, நீ பாலா.

நீ அமிர்ஜான்.