பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச்சி வெய்யில் 2岛?

களையாமல் ஏற்கனவே நாள் கணக்கில் விரிச்சே கிடக்கும். படுக்கையில் பொத்துனு விழுவதுதான் தெரியும். நினைப்பு வரச்சே அது ஒன்பதோ பத்தோ அதுக்குமேல் சமைக்க எங்கே கைவரும். டீ'க் கடையில் காபி, டீ, பன், மசால்

வடை, எது கிடைச்சதோ, காலத்தை ஒட்டு.

உயிருடன் இருப்பது ஒரு நிலை. உயிரோடு இருக்கிறேன் என்று உணர்ந்து வாழ்வது வேறு நிலைதான். ப்ரக்ஞையின் முதல் மூச்சென்று சுலபமாகச் சொல்லிவிட்டேன். என்னுள் ஏதேதோ புரண்டெழுந்து-விழிப்பு என்பது சாமான்ய: மானதா?

ஆகவே பிள்ளைக்குச் சமைச்சுப் போட வந்திருக்கேன். என்ன , முட்டி முட்டி இன்னும் ஒரு மாசம் இருக்கலாம். ஊரில் காரியம் மலையாக் காத்துக் கிடக்கு. தை வந்ததும் கார் அறுப்பு-வயலில் கதிர்கள் கனம் தாங்காது சாஞ்சுடும். கொல்லையில் தேங்காய்க் குலை முத்தியிருக்கும். இப்பவே எந்த ராத்ரி பங்காளி வந்து பறிச்சுண்டு போயிருக்கானோ? சுப்புவுக்கு வரன் மும்முரமா தேடியாகணும். இந்தத் தைக்கேனும் வழி பிறக்குமா?

கறிவேப்பில்லைக்கன்னு புழைச்சுடுத்துன்னு கடிதாசிலே ஒரத்துலே ஒரு வரி கண்டதுமே உடம்பு பரபரத்துப் போச்சு. அதைப் பார்க்காமல் நினைக்காமல் இருப்புக் கொள்ளல்லே. இங்கே இவன், அங்கே அது-அதனாலே ரெண்டும் ஒண்ணா யிருமா. இதென்ன தத்துப் பித்து மனம் மனசைச் சீறித்து.

  • அப்பப்பா, என்ன ருசி! இந்தக் கீரை பொரிச்சுக் குழம்பைத் தினம் பண்ணிப் போட்டாலும் ஆயுசுக்கும் அலுக்காமே சாப்பிட்டுண்டிருப்பேன்."

கூடச் சாப்பிட உட்கார்ந்தவர், இலைமேல் முகம் இன்னமும் தாழக்குனிந்தது, கண்ணில் துளும்பலை மறைக்க.