பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் 3莎等

1 யார் இந்தப் பெண்? இவளை எங்கே பிடிச்சுண்டு வந்தேள்?’’

என்ன ஆச்சு?”

நைவேத்யத்தை ருசி பார்த்து, எச்சில் பண்ணி வழிச்சு முழுங்கிண்டிருக்கா.'

ஓ' குருக்களுக்கு ப்ரமை பிடித்தாற்போல் ஸ்தம் பித்து, உடனே சிரித்துவிட்டார்.

இதிலே என்ன சிரிக்கக் கண்டுட்டேள்?"

குருக்கள் சமாளித்துக்கொண்டு இதோ பார் அகிலா, பொறுத்துக்கோ. இன்னி சாயங்காலம் வரைக்கும்தான்.'

இதென்ன ரெண்டுபேரும் சாயந்திரத்துக்குக் கண்டம் வெச்சிப் பேசறேள்! அவளை வெள்ளிக்கிழமை அதுவுமா யார் போகச் சொல்றா?"

அதிலா, அவள் நம் இஷ்டத்திலில்லை. நாம்தான் அவள் இஷ்டத்திலிருக்கிறோம்."

இதென்ன பாஷை என்ன புதிர்?"

சாயந்தரம் வரைக்கும்தான்"-கெஞ்சினார்.

ஒன்றும் புரியவில்லை. பொட்டைத் தேய்த்துக்கொண்டு அகிலா உள்ளே சென்றாள். கூடவே பிடரி குறுகுறுத்தது. பயம்?

அவள் டப்பாக்களைத் திறந்து, உள் பார்த்து மூடிக் கொண்டிருந்தாள்.

என்னம்மா தேடறே?’’

& #

பசிக்கறதம்மா அகிலாவின் பார்வை அடுப்பு மேடைமேல் சென்று திக்கிட்டது.

பெண்னே, உன் பேர் என்ன?”