பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

முடியரசன்


வைக்கும் சீரியவுள்ளம் முதலியன பாவேந்தரிடத்துக் காணப்படும் உயர் குணங்களாம்.

இவ்வாறு பாவேந்தரின் வாழ்வும் இலக்கியப் பணியும் ஒன்றோடொன்று இரண்டறக் கலந்து, புதிய தமிழகத்தை உருவாக்கப் போராடும் போர்க்களமாகி, வழிவழி மறவர் பலரை உருவாக்கிப் போர்ப் பயிற்சி தந்து வருவதை, அவர்தம் பாடல்களால் நாம் உணர்கிறோம்.

பாவேந்தர் வாழ்க்கை நமக்கு ஒரு வழிகாட்டி

அவர்தம் இலக்கியம் புதிய தமிழகத்தின் வரைபடம்.

(புதுவைப்பல்கலைக்கழகத்தில் 30.4.1987இல் நிகழ்ந்த பாவேந்தர் விழாவில் ஆற்றிய தொடக்க உரை)