எரிநட்சத்திரம் 0 140 காட்சி 21
இடம் : பிச்சாவரம்காட்டுக்கடல் அரிப்பு நேரம் : இளங்காலை உறுப்பினர்கள் : நம்பி நெடுமுடி
நெடுமுடியும் நம்பியும் கடல் அரிப்பில் படகில் சென்று கொண்டிருக்கின்றனர். எங்கும் மயான அமைதி. சுற்றிலும் சூழ்ந்திருக்கும் அடர்ந்தகாடும், அதில் விநோதமாக வளர்ந்திருக்கும் சுரபுன்னை மரங்களும் அச்சந்தரும் அமைதியை எங்கும் பரப்பிக் கொண்டிருக்கின்றன. தொலைவில் சிறு புள்ளியாக ஒரு தனிப்படகு தென்படுகிறது, பறவைகளின் கீச்சொலியும், படகைத்தள்ளும் துடுப்போசையும் தவிர வேறு ஓசை எதுவும் அவர்கள் காதில் விழவில்லை. நம்பி :
தனியாக யாரும்
இங்கு வர அஞ்சுவர் நெடுமுடி:
காடும்
இந்தக் கடற்கானலும்
இதைச் சுற்றியுள்ள ஊர்களும்
ஒரு காலத்தில்
பிச்சாவரம் ஜமீனுக்குச்
சொந்தமாக இருந்தவை. நம்பி :
பிச்சாவரம் ஜமீனா? நெடுமுடி:
nh?
பிச்சாவரம் ஜமீன்தார்
பெருஞ் சோழர்
வழியில் வந்தவர்
என்று சொல்வார்கள்.
எழுபத்தைந்து