இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
63 0 முருகுகந்தரம்
சகுந்தல்ை:
தாள் வரையில் தொங்கிய என் கருவிழுதுக் கூந்தலைத் தன் கூட்டம் என்று கருதிய வண்டு என்னைத் துரத்தியது. அதற்குப் பயந்து அலறி ஒடிய என்னை ஒடிவந்து நீங்கள் காப்பாற்றியது நினைவில் இல்லையா?
துஷ்யந்தன்
இல்லை.
சகுந்தலை:
எனது புன்னையிலைக் காலில் தர்ப்பை குத்திப் புண் செய்த போது என் காலைத் தொட்டுத் தர்ப்பையைப் பிடுங்கினி, எனது மதுக்கண்களால் உங்கள் மார்பில் புதுப்புண்கள் செய்ததாகச் சொல்லிச் சிரித்தீர்!
துஷ்யந்தன்
சேசே! உன் காலை நான் தொடுவதாவது?
சகுந்தலை:
நெளிகின்ற புழுப்போல இலைப்படுக்கை நெருப்பில் நான் துடிக்கையில்