பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இவற்றை, விளையாட்டாக போக்கிவிட முடி யுமா? முடியாது. வினையால், தெளிந்த வினையால், உறுதியான வினையால் மட்டுமே தணிக்க முடியும். நொடிப்பொழுதில் தணிக்க முடியுமா? முடியாது: நெடும்பொழுது பாடுபட்டே தணிக்க முடியும். அதற்கேற்ற பொறுமை தேவை. நீண்ட முயற்சி தேவை. அயராத உழைப்புத் தேவை. - வழியிலே, தடைக்கற்கள் பலப்பல. துாற்றலும் பலப்பல. இவற்றையே எதிர்பார்க்க வேண்டும். இவற்றைப் பொருட்படுத்தாது முன்னேற வேண் டும். போர்முனைக்குப் புறமுதுகு காட்டாத ஆண்மை வேண்டும். சமூகப் போர்முனைக்கும் அத்தகைய ஆண்மை தேவை. அதற்கேற்ற உறுதி யைத் தேடிக்கொள்வோமா? 'துச்சமாக எண்ணி நம்மைத் துறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே' என்று எக்காளமிட்டு நடப்போமா? - கொள்கையில் நன்மை, உண்மை, உறுதி மூன்றும் சேர்ந்து விட்டால் வெற்றிக்குக் கேட்கவா வேண்டும்? எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் இது பொய்யா மொழியன்ருே! இதை உணர்ந்து, எண்ணித் துணிவோம். துணிந்து நடப்போம். நல்லது. காலம் சரியானதா?’ என்ற ஐயம் பிறக்கிறதா தம்பீ! ஐயம் தெளிவோம், வா! நம் தற்காப்புக்காகயார் மண்ணையும் கவர அல்ல-போராட வேண்டிய நெருக்கடி நேர்ந்துள்ளது. இப்போரில் வெற்றிபெற வேண்டும். அதற்கு ஒற்றுமை தேவை. ஒற்றுமைக்