இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10
யில் பாட்டின் மூலமாகச் செய்து வரும் தொண்டு பெரிதும் பாராட்டத்தக்கது. வாணிதாசனார் மேன்மேலும் இத்தகைய அரிய நூல்களைத் தமிழ்நாட்டுக்கு உதவித் தம்முடைய ஆசிரியருக்கும் தம் பெற்றோர்க்கும் தமிழர்கட்கும் என்றும் அழியாப் பெருமையைத் தருவாராக! இவர்தம் பாடல்கள் தாகூர் பாடல்களைப் போன்று பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுவனவாக! மடமையில் துயிலும் மக்கள் விழிகளைத் திறந்து பார்த்துப் புத்தம் புது வாழ்வு பெற்று வாழ நம் தமிழ் நாட்டுத் தாகூராகிய வாணிதாசனார் பல்லாண்டு பல்லாண்டு வாழ்வாராக !
25-12'-53 | |
சென்னை-1. |
மயிலை சிவ முத்து