பக்கம்:எழிலோவியம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எழிலோவியம்

1

சிட்டுகள் இசைக்கும்; வான
இருளினில் தெளிவு பாயும்;
மொட்டுகள் நுகர வண்டு
முன்பின்னாய்ப் போட்டி போடும்;
கட்டினைக் குலைக்கும் கீழ்வான்;
வைகறைக் குளிர்ந்த காற்றுப்
பட்டுடல் மகிழும் காலை
ஒவியம் பார் !பார் ! தம்பி !

2

தொடுவான மதிலுக் கப்பால்
தோன்றிடும் அழகைக் காண
நடுவினில் துளைத்த சந்தோ,
அகண்டமோ, நடுவி ளக்கோ
கடலிடை எழுந்த காலைக்
கதிரவன் ? கதிரின் வீச்சுப்
படுமிட மெல்லாம் பொன்!பொன்!
பார்எழி லோவி யத்தை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/14&oldid=1301939" இலிருந்து மீள்விக்கப்பட்டது