இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
என் உரை
இயற்கையே எழிலோவியம்! அவற்றுள் சில இந்நூலில் கருத்தோவியம் கலந்த சொல்லோவியம் ஆக்கப்பட்டுள்ளன! இவை உயிரோவியம் ஆகட்டும்! இதுவே என் அவா!
கவிதைகளை நான் வாய்மொழியாகப் படிக்க உடல் தளர்ந்தும் உள்ளம் தளராது உவகையோடு ஒரு நாள் கேட்டு, மறுநாளும் கேட்டு மனம் குளிர்ந்து தமது 'வேட்கை'யைத் தெரிவித்த தமிழ்ப் பெரியார் திரு வி.க. அவர்கட்கும், இந் நூலுக்குச் சிறப்புரை தந்தும், என்னைப் பலவாறு ஊக்கியும் பணியாற்றத் தூண்டி வரும் தமிழ்த் தாத்தா திரு.புலவர் மயிலை சிவ முத்து அவர்கட்கும் என் உளமார்ந்த நன்றி என்றும் உரியதாகும்!
இந்நூலே வெளியிட்டு உதவிய தமிழ் உரம் பெற்ற இளைஞர், மலர் நிலைய உரிமையாளர் திரு. ந.பழநியப்பர்க்கு என் நன்றி!
வாணிதாசன்
புதுவை | |
1-1'54 |