பக்கம்:எழிலோவியம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



70

3

ன்னரும் மொழியாம் இன்பத்
தமிழினைச் சாய்க்க வந்த
புன்மொழி இந்தி கண்டு
புலியெனச் சீறி நாட்டின்
நன்னிலைக் குயிரை யீந்த
நடராசன் தால முத்தை
இன்னமும் எழுப்பிக் காட்டும்
கல்லறை; எழுச்சி யூட்டும்

4


லைதரு வளனும், காட்டு
மரந்தரு வளனும், நன்செய்
புலந்தரு வளனும், நெய்தற்
பொருள்களும் பெற்று வாழ்ந்தோர்
வலைப்பட்ட மானாய் இன்று
வடவருக் கடிமை யான
நிலையினைக் கொதிக்கும் நெஞ்சைக்
கல்லறை நேரில் சொல்லும் !

5


பேதைமை இடையில் வந்து
பிரிவினை செய்த தாலே
காதலை வளர்த்துச் சாதிக்
கட்டினில் தேய்ந்த பெண்கள்
ஊதுலை யானார் ! அன்னோர்க்
குறுதுணை யான இன்பச்
சாதலைத் தமிழர்க் கின்றும்
கல்லறை இடித்துக் காட்டும் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/71&oldid=1299742" இலிருந்து மீள்விக்கப்பட்டது