இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
72
9
படிப்படி யாக நாட்டில்
படிந்திட்ட மடமை ஆட்சிக்
கொடுமையை எதிர்த்தோர், நல்ல
கொள்கையை விதைத்தோர் சாவின்
அடுபசிக், காளே ஆனார்;
ஆனாலும் அன்னோர் தொண்டை
முடித்திடும். காலம் என்றே
கல்லறை முணுமு ணுக்கும்!
10
அழிவிலாப் பெருநூல் செய்தார்,
அருங்கலை வளர்த்தார், நாட்டில்
பழியினைச் சுமந்தார், மென்மைப்
பச்சிளங் குழவி, கெண்டை
விழியினர், காளை, மூத்தோர்,
மேலவர், இழிந்தோர்க் கெல்லாம்
கழியன்பால் அமைதி காட்டும்
கல்லறை! கடந்தார் உண்டோ ?
------