காலனும் காலும் 1.65
'நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன முறையே’
என்பது அந்தப் பாடல். நீலத் திருமேனியும் தூய ஆபர ணங்களும் கொண்ட அம்பிகையை ஒரு பாதியிலே கொண்ட சிவபெருமானுடைய இரண்டு திருவடி நிழலின் கீழே, மேல், கீழ், நடு என்று அமைந்த மூன்று வகை உலகங்களும் ஒன்றன்பின் ஒன்ருக முறையே தோன்றின. என்பது இந்தப் பாடலின் பொருள்.
சக்தியின் தோற்றம் இல்லாவிட்டால் சிவம் தொழிற் படாது. சக்தி தோற்றியவுடன் படைப்பு முதலிய தொழில்கள் தொடங்குகின்றன. முதலில் பாதியாக ஒட்டித் தோன்றிய அன்னை பின்பு தனியாகவே பிரிந்து இணைந்து நிற்கிருள். ஒட்டித் தோன்றிய கோலமே பழையது என்று மணிவாசகர் பாடுகிரு.ர்.
‘'தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும் - பால் வெள்ளே நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் சூலமும் தொக்க வளையு முடைத்தொன்மைக் கோலமே G5756 குளிர்ந்து தாய் கோத்தும்.பீ.' இங்கே அர்த்தநாரீசுவரக் கோலத்தைத் தொன்மைக் கோலம் என்கிரு.ர்.
அபிராமிபட்டர் இப்போது ஒட்டியிணைந்த அர்த்த நாரீசுவரக் கோலத்தையும், ஒட்டாமல் தனியே இணைந்த கல்யாணசுந்தரக் கோலத்தையும் மனத்திலே தியானம் செய்கிரு.ர். .
வவ்விய பாகத்து இறைவரும் நீயும்
மகிழ்ந்திருக்கும் . செவ்வியும், உங்கள் திருமணக்
கோலமும் சிந்தையுள்ளே.