பக்கம்:எழில் உதயம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 எழில் உதயம்

வர்கள் என்று சொல்லுவார்கள்: அல்லது தனிமுதற் கடவுளைச் சைவர்கள் பரசிவம் என்றும், வைணவர்கள் பரவாசுதேவன் என்றும் வழிபடுவார்கள். பரம் என்ற சொல் மேலானது என்னும் பொருளுடையது. அவ்வாறே பூரீவித்தியா உபாசகர்கள் அம்பிகையைப் பராசக்தி என்று கொண்டாடுவார்கள். பூரிராஜராஜேசுவரி, மகா திரிபுரசுந்தரி என்றெல்லாம் வழங்கும் அந்தப் பரமேசுவரி திரிமூர்த்திகளையும் பிற தேவர்களையும் தன்னுடைய ஆணையைத் தாங்கி நடத்தும் அதிகாரிகளாகக் கொண்டு விளங்குகிருள் என்று கொள்வர். துர்க்கை, லக்ஷ்மி, சரசுவதி என்ற மூன்று சக்திகளும் அந்தப் பெருமாட்டி யின் கூறுகளாக மும்மூர்த்திகளிடமும் இருந்து அவர வர்களின் தொழிலைச் செய்விப்பவர்கள். அந்த வகையில் சிவனுடைய சக்தியாக இருக்கும் உமாதேவி பச்சை நிறம் உடையவள். லக்ஷ்மி, சரசுவதி ஆகிய இருவர்களே யும்விட உமாதேவியினிடம் அம்பிகையின் கூறு மிகுதி.

எல்லோருக்கும் மேலாக விளங்கும் அம்பிகையாகிய பூரீராஜராஜேசுவரி செம்மை நிறம் உடையவள். செம்மை என்பது இந்த நாட்டில் நிறைவுக்கும், முழுமைக்கும், உயிர்த் தன்மைக்கும், நேர்மைக்கும், நன்மைக்கும், மங்கலத்துக்கும் அடையாளம். இதை முன்பும் பார்த் தோம். அம்பிகை எங்கும் நிறைந்தவளாய், முழுமுதற் பொருளாய், உயிர்களுக்கு உயிராய், நேர்மையான அருளாணையைச் செலுத்துபவளாய், நலந்தரும் மாதா வாய், சர்வமங்கலையாய் விளங்குகிருள் என்பது அவளு டைய செவ்வண்ணத்தால் பெறப்படும் குறிப்பாகும். அது வெறும் சிவப்பு அன்று; தேசுடைய சிவப்பு. ஒளி விடும் சிவப்பு: கண்ணக் குளிர்விக்கும் சிவப்பு: அந்தச் சிவப்புக்குத்தான் முதல் பாட்டில் ஆறு உவமைகளைச் சொன்னர் அபிராமிபட்டர். . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/32&oldid=546189" இலிருந்து மீள்விக்கப்பட்டது