பக்கம்:எழில் விருத்தம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் - 29 கத்தும் கடலின் ஓரத்துக் கரையில் வாழும் சுழல்விளக்கே ! முத்துக் குவியல் கண்டிருப்பாய்; முதிர்ந்த பவளக் காட்டிடையில் செத்த மனிதர் கண்டிருப்பாய்; சிதைந்த கலங்கள் கண்டிருப்பாய் ! பொத்தி வாயைத் திறவாமல் பொறுத்தால் நெய்தல் பொறுத்திடுமோ? 6 நெய்தற் பேரூர்க் கரையோரம் நிமிர்ந்து நிற்கும் சுழல்விளக்கே ! வையம் எங்கும் உன்னினத்தார் கடலின் மருங்கே வாழ்ந்தாலும் கையாம் ஒளியின் கதிர்வீசிக் கரையின் ஊரை அறிவிக்கும் பொய்யில் மொழியை நாவாய்க்குப் புரியச் செய்தல் புதுமையதே ! 7 காலம் எல்லாம் கரையிருந்தே கலத்தைக் காக்கும் சுழல்விளக்கே ! ஏலம் மிளகை மலைத்தேக்கை இருண்ட கடலின் ஒளிமுத்தைக் கூலப் பொருளை மாமயிலைக் கொம்பைக் கொடுத்தே குதிரைகளை ஏலக் கொண்ட தமிழ்நாட்டின் - துறைகள் இருண்ட வகை என்னே? 8