பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வல்லிக்கண்ணன்



இன்றும்
கையிலே
வாளித்தண்ணிர், சாயக்குவளை
கந்தைத் துணி, கட்டைத் துரிகை!
அறப்பணி ஒய்வதில்லை,
ஒய்ந்திடில் உலகம் இல்லை!

‘ஸ்ட்டயர் ஆக - பரிகாசத் தொனியோடு எழுதும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார். விசாரணை என்பது இந்த ரகத்தைச் சேரும்.

தத்துவந்தானே? வெங்காயம் !
போடா போ!
மூடியதை மூடிப்
பின்மூடி முடிவா?
உரித்தால்? மேலும் உரித்தால்
கண்ணீர் கொட்டும்
முட்டாளுக்கு உருக்கம்!
மூளை மோதினால்
தலைக்குத் தேங்காய்!
உனக்கும் எனக்கும்
முடிந்தால்
இதயத்திற்கு மருந்து!
அனேகருக்கு
வயிற்றை நிரப்ப
வேகும் கூத்துத்தான்!
என்று மேலும் வளர்கிறது. அது.

‘இலக்கிய அனுபவம் என்பதும் நல்ல கிண்டல் தான்.

சொல்வ திரண்டு வகை
சிந்தித்துச் சொல்லல்! சிந்தை இலையாதல்!
கரகம் அல்லது
கண்கட்டு ;
இரண்டுக்கும்
பொருள்

229