பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| வல்லிக்கண்ணன்-) - - —CAT) தப்பித்தவறி எதையாவது இப்படி இருக்கலாம்: என்கிற மாதிரி சொன்னாலும் அதை அவர் விரும்பமாட்டார். 'பாருங்க! எழுதியாச்சு, அது அவ்வளவு தான் என்று அழுத்திச் சொல்லி விடுவார். - அவருடைய கணிப்பின்படி, ஒரு எழுத்தாளன் என்பவன் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். சற்றுத் தொய்வு ஏற்பட்டாலும் மறந்து போய் விடுவார்கள் என்பார். nஸர்-என்கிறநாயைப் பற்றி முன்னால் குறிப்பிட்டேன். அதை நாய்' என்று சொன்னால் கூட நா.பா.விரும்பமாட்டார். சொந்தப் பிள்ளையைப் போல் அதன் மீது உயிரையே வைத்திருந் தார். nஸருடன் நா.பா. நடந்துவருகிறமாதிரி ஒருமுழுப் பக்கப் படத்தைக் குமுதத்தில் வெளியிட்டார்கள். அதற்கு பால்யூ" தந்திருந்த குறும்புத் தலைப்பு நா.பா.வின் நடை. ஒரு நாள் மாலை நேரத்தில் நா.பா.வின் இல்லம் சென்ற போது அங்கே இருள்மண்டிய மாதிரி ஒரு பிரமை. வழக்கமாய்க் காது செவிடுபடும்படி கேட்கிற inஸ்ரின் குரல் வரவேற்க வில்லை. ஸோபாவில் அமர்ந்து கன்னத்தில் கையை ஊன்றி எங்கோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். வாங்க.: என்று உற்சாமின்றியே வரவேற்றார். வழக்கமாய் nஸர் படுத்திருக்கும் இடத்தில் ஒர் அகல் விளக்கு எரிந்து கொண்டி ருந்ததைப் பார்த்து மனம் துணுக்குற்றது. நிமிர்ந்து பார்த்தேன். 'சுப்ர.பாலன் 'என் nஸரை இலங்கைத் தமிழர்களின் போராட்டத்துக்குப் பலி கொடுத்து விட்டேன்' என்றார். அன்றைக்கு மாநில அளவில் நடைபெற்ற பந்த்! இலங்கைத் தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்றது. மருத்துவமனைகள் கூட இயங்கவில்லை. காலையில் உடல் நலம் குன்றியிருந்த nஸரை அழைத்துக் கொண்டு, நந்தனம் கால்நடை மருத்துவ மனைக்குப் போயிருக் கிறார் நா.பா. உள்ளே மருத்துவரோ, உதவியாளரோ யாருமே இல்லை. காவலாள் மட்டும் தான் இருந்திருக்கிறார். - என்ன செய்வது என்று தெரியாமல் காருக்குத் திரும்பி னால், nஸர் அவரை நிமிர்ந்து பார்த்து விட்டு அப்படியே க்ண்களை மூடிக் கொண்டதாம். அந்த நேரத்தில் அவர் மனம் என்னபாடு பட்டிருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்ப்பது கூடச் சிரமம் தான்! r