பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவைக்கு புறப்பட்டோம். அப்பொழுது மு.வேலாயுதம் தான் வைத்திருந்த சிறிய பெட்டிக்கடையில் "தீபத்தையும் விற்பனை செய்து கொண்டிருந்தார். சுமார்இரண்டாயிரம் பிரதிகள்கோவையில் விற்பனையை உயர்த்திய பெருமை வேலாயுதத்தின் உழைப்பும், நா.பா.மீது அவர் வைத்திருந்த பாசத்தினால்தான். வேலாயுதம் மதுரை மேலுரை அடுத்த உலகநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர். உலகநாதபுரத்தில் நடைபெற்ற அவரது தம்பி, தங்கையின் திருமணத்தில் நா.பா.வுடன் நானும் பங்கு கொண்டேன். ஈரோடு நண்பர் குருராஜனும் கலந்து கொண்டார்கள். 1967ல் நா.பா.ரஷ்யா பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியவுடன் அவருக்கு காஞ்சிபுரத்தில் 'நேரு சோசலிசபேரவை"சார்பில்எனது உறவினர்திரு.மா,கச்சபாளையம் தலைமையில் ஒர் பாராட்டு கூட்டம் பச்சையப்பன் பள்ளியில் நடத்தினோம். அந்த கூட்டத்தில் (ராமாஸ் கேப்) வி.ஆர்.ஜியும் கலந்து கொண்டதாக நினைவு. அப்பொழுது சென்னையிலிருந்து ஸ்டேண்டர்ட் எரால்ட் காரில் நா.பா. வந்து சென்றார். எனது காஞ்சிபுரம் இல்லத்தில் உணவு அருந்தினார். இதற்கு முன் 1969ல் வேலூரில் நடைபெற்ற இலக்கிய கூட்டத்திற்கு சென்று திரும்பிய வழியில் காஞ்சியில் இருந்தகாஞ்சிலாட்ஜில் இரவில் தங்கினோம். மறுநாள் எனது விட்டிற்கு வந்து உணவு அருந்தினார். எனது தந்தையார் பட்டு நெசவு செய்ததை கண்டு, தறி விபரங்களை கேட்டு அறிந்தார். எனதுதாயாரின் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு விரும்பி சாப்பிட்டார். ஒரு பருக்கையும், ஓர் கருவேப்பிலையும் அவர் சாப்பிட்ட இலையில் காண முடியவில்லை. காரணம் உணவை வீண் அடிக்கக்கூடாது என்பதை அவர் மூலம் நான் உணர்ந்தேன். - பல நாட்களில் நா.பா. தியாகராயநகர் வீட்டிற்கு மாலையில் அவருடன் சென்று இரவு உணவு, அவரது அம்மா கையினால் வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம் சாப்பிட்டது மறக்க முடியாது. திருமதி சுந்தரவல்லி அவர்கள் பரிமாறவும் உணவு அருந்தியுள்ளேன். நா.பா.வின் அம்மா மறைந்த போது அவருடன் இடுகாட்டிற்கு சென்றேன். அதோடு அவர்கள் குடும்ப நிகழ்ச்சிகளை பத்தாம் நாள் அன்று எனக்கு மற்றவர்களுடன் உணவு வழங்கினார்கள். - -