உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தறிப் பாட்டு

35

(7)

ந்தபின்பு முருகேசன் திருவடியை
          நினைவில் வச்சு அன்பாய்த் தொழுதி றைஞ்சிச்
சொந்தக் கப்பல் ஓட்டும்வகை— கப்பல்
          துறையறிந்து தமிழ்பாட.....
வாரான கோல்கொண்டு நேராகப் பாய்ச்சு;
          வரும்அலா ரெல்லாம் வாரியே போடு;
மண்டை கடையாணி கொண்டையும் கட்டி,
தார்தனைஎடுத்து நாடாவில் தாக்கித்
          தலைதனைப் புடிச்சுத் துடைப்பத்தின் கீழ்வாங்கி
ஏறடா பூட்டை, இறுத்தடா மிதியை,
          இந்தண்டை அந்தண்டை வந்ததா பாரு;
சிரசிலே சீரளந்து திட்டமாய்க் கட்டு.
    [1] திட்டுமட்டுமாகக் கெட்டியாக் கட்டு
பிடியடா விசைகுத்திச் சதமுதல் குறியை
          ஏலேலோ — மயில் வேலோனே!

(8)


முதலாம் குறிக்குப் பத்துவெடி போட்டு
         முடுக்கிவந்து அச்சில் முகர வந்து
சதமான ரெண்டாம் குறிக்குக் கப்பல்
         தானடையும் வகைதனைச் (சொல்லுவேன்)
                 கேளாய்,


வரிக்கயிறு விட்டொரு பீரங்கி போடு;
        பத்துப்பீ ரங்கிஒரு டபீரென்று போடு;
பார்த்துப்பிடு அப்பாலே பத்தாம் குறிக்கு;
        எழுபது வெடிபோட்டு ஏகமாய்ச் சுருட்டு;
குருபாதம் நம்பிநீ தறிவிட்டு இறங்கு;
        ஏலேலோ — மயில் வேலோனே!

(9)


குருபாதமாக வேணுமுன்னு பின்னும்
        குடிவாழ வேனுமுன்னு


  1. (பி.ம்.) திட்டுமட்டுமாக