பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் பணியகம் அது. நாங்கள் போன சமயத்திலும் (இரவு 7.30) அங்கே பலர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். எதிரில்ே அடர்ந்த காடு: மான்கள் துள்ளி ஓடின. (இங்கு 8.30 வரை யில் பகல் ஒளி உண்டு) பிறகு அனைவரும் வீட்டுக்கு வந்து, சிறிது நேரம் பல பொருள்கள் பற்றிப் பேசியிருந்து உறங்கச் சென்றோம். நாளை சிகாகோ பல்கலைக்கழகத்தே உள்ள பணி பற்றிய எண்ணத்தோடு நான் உறங்கினேன்.