பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எமிலி ஜோலி


“கொடுமை! கொடுமை!”

ஒரு பெருமூச்சு.

“அக்ரமம்! அநீதி! அடுக்காது”

கண்ணீர் புரள்கிறது.

எனக்கா இந்தக்கதீ?”

ஏக்கமான பார்வை,கடலைக் கடந்துசென்று, பாரிஸ் பட்டணத்திலே, மாளிகை, மனைவி, மக்கள், உற்றார் உறவினர்மீது பாய்கிறது.

“ஒரு குற்றமும் செய்வாத எனக்கு இந்தக கடுந் தண்டனையா? நீதிக்காகப் போராடுபவர்கள் இல்லையா? நிரபராதியைக் காப்பாற்ற யாரும் இல்லையா? பொய்யை மெய்யென்றாக்கும் வஞ்சகரை வீழ்த்த ஒரு வீரன் இல்லையா ? உண்மைக்காக பரிந்து பேச, யாரும் இல்லையா! ஏழைபங்காளர் உண்டோ இல்லையோ! ஒரு பிழையும் செய்தறியா என்னை இந்தத் தீவிலே தள்ளிய தீரர்களின் போக்கை, எதிர்க்கும் துணிவு கொண்ட ஒரு தீரன் இல்லையா! எல்லோருமா மண்டியிட்டு விட்டனர்? ஒருவர் இல்லையா உண்மை உரைக்க! என் பொருட்டுப் போரிட ! நீதியை நிலைநாட்ட!”

சோர்வு மேலிட்டுச் சாய்கிறான்! அவனுடைய உடை சுக்குநூறாகிக் கிடக்கிறது. ஒரு காலத்தில் ராணுவ உடைதரித்துக்கெம்பீரமாக ப்பாரிசியில் உலவியவன், ஆயுட் தண்டனை பெற்று, (அந்தமான் தீவு போன்ற) டெவில்ஸ் தீவிலே உழல்கிறான்.