பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

________________

2 அவன் செய்த குற்றம் என்ன? அதைத்தான் அவன், தண்டிக்கப்பட்ட அன்றும் கேட்டான், தீவிலே ஒவ்வொரு நாளும், கேட்டபடி இருந்தான்; பதில் என்ன? காற்று ஏதோ பேசிற்று ; புரி வாத மொழி! அலை ஒலித்தது; ஒலிதான், பொருள் இல்லை! அவனுடைய பெருமூச்சு ஒன்றுதான் புரியக்கூடிய மொழியாக இருந்தது. அனியாய மாகத் தண்டிக்கப்பட்டான், வஞ்சகரின் வலையில் சிக்கினான், வதைகிறான்; அக்ரமக்காரரின் லக் காகி இம்சைப்படுகிறான். குற்றமற்றவன், கொடுமை செய்கின்றனர் என்று தெரிவிக்கிறது பெருமூச்சு. அது, தீவில் ! பாரிஸ் நெடுந்தூரத்தில் இருக்கிறது.பாரிஸ்.......... அலை தீவிலே, திக்கற்றநிலையிலே, தீயர்களின் சூழ்ச் சியினால் தண்டனை பெற்ற டிரையஸ், 'ஒருகுற்றமும் நான் செய்யவில்லையே என்று, குமுறிக் கொண்டிருந் தான். அலைகடலிடையே உள்ள அந்தத் தீவிலே, அவன், ஆறுதல் கூறுவாரின்றி அவதிப்பட்டான். கண்ணெதிரே கடல் - கருத்திலேயும் கடல்தான். அலையாக எண்ணங்கள். தாய்நாட்டைத் துரோகம் செய்து, அரசாங்கத்தாரின் இராணுவ இரகசியத்தை வெளியிட்டான் என்று 1895-ல் குற்றம் சாட்டப்பட்டு, ஆயுட்தண்டனை தரப்பட்ட வன் டிரைபஸ். அவன்மீது சுமத்தப்பட்டது. அபாண்டம் என்று நிரூபிக்க முடியவில்லை - இடங் தரப்படவில்லை. உண்மைக்குற்றவாளிகள் டிரைப் சைப் பலியிட்டுச் சட்டத்தைச் சரிப்படுத்திவிட்டுத் தங்களைக் காப்பாற்றிக்கொண்டனர். அவன், தீவிலே திகைக்கிறான்; தீயர்கள் தேசத்தலைவர்க ளெனத் திகழ்கின்றனர். டிரைபசுக்காக வாதிட யாரும் இல்லை! அவன் மனைவி ஓபாது அழுதாள். நண்பர்கள் கதறினர். ஆனால், அவன் பொருட் நிப் போரிட ஒரு மாவீரனும் தோன்றவில்லை.