பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

________________

3 அவனுக்காகப் போரிடவேண்டுமென்றால், பலம் பொருந்திய பிரன்சு சர்க்காருடன் போர் என்று பொருள். வஞ்சனையில் கைதேர்ந்தவர்களுடன், புன்னகைப்புலிகளுடன், நயவஞ்சக நரிகளுடன் போர் தொடுக்கவேண்டும். இணையில்லாத வீரம், ஏழைக்காக எதையும் சகித்துக்கொள்ளும் துணிவு நீள்வையமே எதிர்த்தாலும் அஞ்சாமல் நீதிக்காகப் போரிடும் பண்பு, இவை வேண்டும்! போக போக் கியத்தில் புரண்டுகொண் டிருந்தவர்கள், ஏன் தமது சிறு விரலையும் தூக்கவில்லை! அவர்களின் அலுவல் அதுவா!! மதுநிறைந்த கோப்பை, மதுர மொழி வழியும் அதரம், மயக்கமூட்டும் கண்கள், இவைகளில் மனதைப் பறிகொடுத்தவர்களுக்கு, ஒரு டிரைபஸ் அக்ரமமாகத் தண்டிக்கப்பட்டது பற்றி என்ன கவலை ! "பாபம்! டிரைபஸ், எவ்வளவோ கண்ணிய வாழ்ந்துவந்தவன், கெம்பீர புருஷன்: அவன் கதி கடைசியில், ஆயுட்தண்டனை !" மாக "என்ன செய்யலாம். சட்டப்படி, உயர்தர நீதி மன்றத்தார் விசாரித்தல்லவா தண்டித்தனர்; அரசாங்கத்தின் இராணுவ இரகசியத்தையல் லவா, டிரைபஸ், வெளிப்படுத்திவிட்டான். சாதா ரணக் குற்றமல்லவே!" "செய்திருப்பானா? டிரைபஸ் உண்மையில் குற்றவாளிதானா?" இல்லாமலா, தண்டித்தார்கள், தக்க ருஜு இருந்ததால்தான் நீதிபதிகள் தண்டித்தனர்" இவ்வளவுதான் டிரைபசைப்பற்றிய பேச்சு மாளிகை, கொலுமண்டபம்,நிர்வாக நிலையங்களில். இவ்வளவாவது. பேசப்பட்டதற்குக் காரணம் தீவாந்திர சிட்சை பெறுவதற்கு முன்பு டிரைபஸ்