“வாங்கம்மா! வாங்க! வர இவ்வளவு நேரமா ஆயிற்று?”
“இல்லை பாட்டி! பள்ளியிலிருந்து முன்னமேயே வந்துவிட்டேன். செல்லம் என்னை அவள் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனாள். பேசிக்கொண்டே இருந்து விட்டேன். கொஞ்சம் நேரமாய்ப் போய் விட்டது.”
பாட்டி : கண்னு உனக்கு எத்தனை தரம் சொல்கிறது, செல்லத்தோடு சேராதே என்று? இனிமேல் நீ கண்டிப்பாகச் சேரக்கூடாது. செல்லம் கெட்ட பிள்ளை. அவளோடு சேர்ந்தால் நீயும் கெட்டுப் போவாய். தெரியுமா?
கண் : பாட்டி! நான் நல்ல பிள்ளையா பாட்டி?
பாட்டி : ஆமா கண்ணு! நீ நல்ல பிள்ளைதான்!
கண் : அப்படியானால், செல்லம் என்னோடு சேர்ந்து விளையாடட்டுமே பாட்டி.
பாட்டி : என்ன சொன்னாய்? அவள் உன்னோடு சேர்ந்து விளையாடுவதா?
கண் : ஆம் பாட்டி! செல்லம் கெட்ட பிள்ளை . அவளோடு சேர்ந்தால் நான் கெட்டுப்போவேன். நானோ நல்ல பிள்ளை; என்னோடு அவள் சேர்ந்தால் அவளும் நல்ல பிள்ளையாகி விடமாட்டாளா? அதற்காகத்தான் பாட்டி, அப்படிச் சொன்னேன்.