பக்கம்:ஐயை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரஞர்

பின்ன ரவர், செம்மலினத்

தும்பையினைப் பற்றிப் பேரன்பின் ஐயைபற்றித் தெரிந்தவகை கூறி, இன்னுமவர் பிள்ளையினை

எவரெடுத்து வளர்த்தார் எனுஞ்செய்தி தாமறியா

• திருந்தநிலை சொன்னர்! அன்ன வரும் தனக்குறவாய்

அமைந்த பின்னர், நெய்தல் 'அத்தை'யென்று கத்தியவா றையைமடி வீழ்ந்தாள்! 'இன்னுமொரு நூறுமுறை

சொல்,இனிக்க' என்ன. ஏத்திழையும் 'அத்தையத்தை'

என்றலறிச் சாய்ந்தாள்! 8

ஆங்கதன்பின் பேரமைதி

வாய்த்திட எல் லாரும், ஐயையினைச் சுற்றிநின்றே

உளம் விசித்து நின்ருர்: தேங்குமுத முகமலர்ந்து,

வாயடங்கிக் கண்கள் திறந்தபடி நீரொழுகப்

படுத்திருந்தாள் ஐயைl

115

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/185&oldid=1273647" இலிருந்து மீள்விக்கப்பட்டது