இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெருஞ்சித்திரனர்
'கண்மணியே! என்னுயிரே!
நெய்தலினைக் கண் போல் காத்துக்கொள்! என் குண்சை
உனக்கொன்று சொல்வேன்! விண்,மழை,நீர், காற்றெல்லாம்
என் கதையைச் சொல்லும்; ஆனலும், விளங்குகிலாப்
பேதையிதைச் சொல்வேன்! திண் குன்றில், எனக்கவர்ந்த
செம்மல்வர வெண்ணிச் சேர்த்திருக்கும் கற்களுடன்
எனப்புதைத்தே, ஆங்கோர் வெண் மேடை கட்டி,திரை
மேய்த்திருந்த என்போல், வெண்பளிங்குச் சிலையொன்றை
நீ,வைத்தல் வேண்டும்' I I
-என்றுரைத்தே; அன்புமகன்
கையெடுத்து, நெய்தல்
இளங்கையோ டிணத்துவைத்தாள்
இமை முடி விட்டாள்!
சென்றதவள் வல்லுயிரும்;
நின்றதவள் பேச்சு!
சீர்த்ததுயர், பொங்குவிழி,
நீர்வீழ்ச்சி-எல்லாம்
117