இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
போருக்குச் சென்றவர்க்கு
விடுமுறை உண் டென்று பொழுதுக்கே அவளிடத்தில்
செவந்திசொல்லி யிருந்தாள்! "ஆருக்கும் ஆண்டொன்றுக்
கொருமாதம் உண்டாம்! அவர் போலும் படைமறவர்
அவ்வூரில் உளராம்! ஊருக்கு வருவதிலே
தடையென்ன இவர்க்கே! உறவென்றே நாைெருத்தி உயிர்வாழ விலையா? பேருக்கே தான் எனினும்
மகனுெருவன் இலளு? பேசாமல் வந்துவிட்டுப்
போகுல்தான் என்ன?"
"அத்தையிருந் தாலொருகால்
வந்தாலும் வருவார்! அன்றைக்கே எமைவெறுத்துப் போயினவர் தாமே! ஒத்திருந்தால் வந்திருப்பார்!
ஒருவேன் அத்தை உயிர்துறந்த துயர்ச்செய்தி
கிட்டியிருக் காதோ?
16