இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
எவ்வுயிருள் தன்னுயிர்போய்
இணைந்ததென வெண் ணி இதுவரைவாழ்ந் திருந்தாளோ
எவ்வுட் லைக் கண்டே அவ்வுடலில் தான் ஒடுங்கும்
ஆவல்மிகக் கொண்டே அங்காந்து கிடந்தாளோஅடடா,ஒ அடடா! அவ்வுயிரே, அவ்வுடலே
செம்மலெனும் ஆன்ற அழகுபெயர் பூண்ருேவாய்
ஆங்கிருக்கக் கண்டாள்! வவ்வுவிழி யாலருத்தி,
வல்லுனர்வால் மாந்தி வைத்திருந்த ஆசையெல்லாம் வழிந்தொழுக ஒடி,
' அத்தான்'என் றிதழ் துடிக்க
அகல்விழி நீர் சாய அல்லிமலர்க் கைநீட்டி
அவனடிக்கீழ் வீழ்ந்தாள்! “எத்தாலும் எப்பொழுதும்
உங்களைக்கா ளுமல் இறவேன் நான் : இறவேன்தான்; இறந்துபட மாட்டேன்!
20