பக்கம்:ஐயை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரகுர்

நினைப்பெழவே மீண்டுமெழுந்

தண்டையில்கண் ணுறங்கும் நித்திலப்பொன் மேனிமகன்

நெற்றியில்கை நீவி, வனப்பவிழ்ந்த முகம்நோக்கி,

வழிந்ததுகில் போர்த்து. வந்தமர்ந்து உடல்சாய்த்தாள்;

வளர்துயிலுங் கொண்டாள்! 6

ஆங்கவளும் அமைதியுடன்

ஆழ்ந்துறங்கும் வேளை, "ஐயை'எனும் குரல்கேட்டே'

அதிர்ந்தெழுந்து நின்ருள்! ஒங்குகதிர் மேலெழுந்தே

ஒளிவெள்ளம் பாய்ந்த உணர்வின்றித் தான் துயின்ற

நிலைகடிந்து கொண்டாள்! தாங்குவெயில் தனையறிந்து

வெளிப்பாய்ந்து வந்து: தன் பெயரை யழைத்தகுரல்

தனக்குரியார் யாரென் றேங்குமுளத் தோடிரண்டு

விழிசுழற்றிக் கண்டே இறும்பூது கொண்டதிர்ந்து

மெய்ம்மறந்து போனள்! 7

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/89&oldid=1273550" இலிருந்து மீள்விக்கப்பட்டது