இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
'அகல் உலகில் அவர் வெறுத்தால்
ஆரெனக்குத் துணையாம்! அத்தையுள ரா,எனக் குப்
பரிந்தவர்.பால் பேச? புகல் எனக்கிங் கவர் தாமே !
புனைந்துகொளக் கேட்பேன்; புலம்பவிட்டால் உயிர்துறந்து
போவதுதான் நன்று! இகலெனக்கு வாராமல்
இறைவனெனக் காப்பார்! இதுவரைக்கும் துயர்ப்பட்டேன்;
இனியொருகால் நீங்கும்! பகலிரவும் போல்தாமே
இன்பதுன்ப மெல்லாம்! பட்டதெல்லாம் துயரிaவே;
பகலினித்தான் இருக்கும்'
-எனப்பலவா றெண்ணியவள்
இமைநனைந்தாள்; என்றும் இல்லாத நம்பிக்கை
பிற்ந்ததவட் கின்று! மனப்பொறையும் குறைந்தவுடன்
மகிழ்வமைதி கொண்டாள்! மலர்விழியை விடியலிலே
மருவியது துரக்கம்!
18