பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடக்கு மென்று சொன்னார்கள் நன்மை தின்மைக் கஞ்சு பணம் சொன்னவரைச் சொல்லி விடு 760 சொல்லாதிருந்த துண்டால் கன்னமிட்ட காசிருந்தால் கழுவேறப் போவானேன்? காசு கண்டாலரசர்கள் களவு சோதிப்பாரோ? பேசு வதற்கு வாராமல் புறங்காட்டியிருப்பாயோ வீடு தன்னில் பணமிருந்தால் விதனச் சொல் கேட்பாயோ ? நாடு கட்டியாளு தற்கு 770 நற் கால முண்டாச்சு தலையளவு வந்தாலும் சடைவு வர விடுவாயோ? குல சேகரனிடத்தில் கூட 'வா' வென்றுரைத்தான், உருவின வாளொரு கையாலே, உயர்ந்த பொந்தித் தடியொருகை திருகு முளைச்ச தோடு சேர்த்தானே யொரு புரத்தில் பிடிக்கடங்கா பொன்னரை ஞாண் 780 பெருகு குஞ்சிப்பட்டரைஞாண் குடக்கடுக்க நாழிப்பணம் கொண்டை முத்துக் கடுக்கனிட்டு, தொண்ணூறு களஞ்சிப்படி தூசிப் பொன் பதக்கனிட்டு காதவழி மணக்கு மந்த கைத் தூரி தான் பூசி தூதுவருஞ் சேவுகனும் சுத்திவர வே நடந்து செம்பு கம்பளிக் காரன் 790 சிறுக்கன் முன்னே யடைப்ப மிட கெம்பியக் கட்டியக் காரர் கிளர்ந்த சங்கீதம் படிக்க பொற்பாதக் குறடுமிட்டு புலி முறுக்குப்போல நடந்தான். தட்ட ராணுவத்தார் தள்ளி நிற்கச் சுட்டமிட்டு