பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 குலசேரகன் படையோடே நடந்தார் நிரைத்த பரிசனம் சேர்வைகாரரும் 1130 நீங்காமல் காரியங்கள் சொல்வாரும் திக் கெல்லாம் மிகக புகழ் கொண்ட பெருமாளும் சென்ற திசையெங்கும் வென்ற பெருமாளும் பக்கத்தில் நிற்கும் பரிகலத்தாரும் பரிக்கும்; கரிக்குஞ் சமர்த்தான பெருமாளும் இரும் புவிக்குள் வருங் காரியங்கள் நினைத்தது சொல்லும் திருத் தம்பிமாரும் கூடியிருந்து உலகாளு மென்ன குலசேகரன் படையோடே நடந்தார். நடந்த குலசேகரர் கோட்டை தன்னை 1140 கடந்தேகு முன்னே தொடர்ந்தது படையும் தென் கடல் தன்னிலே போவதே யென்ன அந்தப் படையும் பல சக்கர மூர ஆலத்திக் காரரும் காளாஞ்சிக் காரரும் பூண்ட மணித்திரள் ஆசுத்திரள்களும் புரவிக் கடலும் சவளப் படையும் சேர்ந்த மறவரும் தொட்டியர் வில்லும் சீனர், விலாடர், கவுடர் மிலாடரும் வேந்தர் திரளும் குறவர் தனிக் கூட்டமும் வேடர் படையும் குறு வன்னியரும், 1150 கொங்கர் தெலுங்கருடன், குறவர் கூட்டமும் கொப்பறை ஏந்திடும் பறைக் காரரும் கிங்கிலியரும் துலுக்கர் ராகுத்தரும் கிடையக் காரருடன் வாணக் காரரும் அம்பு வெடியும், பீரங்கி வெடியும் அதிலே நெருங்கு பரிசனத்திரளும் வெம்பு சிலையுடன் கொத்தாளர் கூட்டமும் வீசி யெறிந்திடு பார் வளையமும் பொன்னிட்ட வில்லும், புலித் தோல் கரிசையும் பூரித்துடன் வரும் நேரியக் காரரும் 1160 முன்னிட்டுக் குத்தும் பரிசைக் கடத்தலை முப்பிடியும் சொட்டை காலிங்க பரிசையும் தத்தாரி வில்லும் சமுதாடு காரரும் தாண்டும் பரிகுத்தி மீள் வாரும் மெத்த நெருங்கும் வளைதடிக் காரரும் வேல் குத்தி ஈட்டியுடன் நூலப் பரிசையும் கொத்தர் குடியில் மறவர்தன் கூட்டமும்