பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பெண் புத்தி கூர்மை பாலா. சரி சரி! நீங்கள் இந்த வாக்குவாதம் ஆரம்பித்தால் இன்றைக்கெல்லாம் முடியாது. நான் சொல்கிறதைக் கேளுங்கள். முன்பு டீ (Tea) சாப்பிட வாருங்கள்-அப் புறம்-உங்கள் வாக்குவாதங்களை ஆரம்பிக்கலாம். (எல்லோரும் போகிருர்கள்.) காட்சி முடிகிறது. .~్వడ్స్లో இரண்டாம் காட்சி இடம்-தோட்டத்தில் கடைவாபி. கடைவாபியின் சுவற்றின்மீது பாலகிருஷ்ணனும் லோகாம்பாளும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். இழே பாலனம்பாளும், சிவராம முதலியாரும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். - பா. நீ என்னதான் சொல், தேகபலம், தைரியம், வீரம் முத லிய குணங்களில் எத்தனே யுகங்கள் கழிந்தாலும் பெண் கள் ஆடவர்களுக்குச் சமான மாகமாட்டார்கள். லோ. யுகங்கள் கழிவானேன்? இதற்கு பல வருடங்களுக்கு முன்பே நமது நாட்டிலேயே ரஜபுத்ர ஸ்திரீகள், கவசம் பூண்டு சண்டைக்குச் சென்றதை மறந்து பேசுகிறீர் களே! சாந்த்பீபி முதலிய மகம்மதிய ஸ்திரீகள்கூட அப் படிச் செய்யவில்லையா?-தற்காலமும் துர்க்கி ஸ்திரீ களும் ஜப்பானிய ஸ்திரீகளும் யுத்தப் பயிற்சி பெற்று வருவதை நீர் கேட்டதில்லையா? நம்முடைய தேசத்து ஸ்திரீகளுக்கும், ஆடவர்களுக்குக் கொடுப்பதுபோல் அப்பயிற்சிகள் கொடுக்கட்டும், அவர்களுக்கும் தைரி யம், வீரம் எல்லாம் எப்படி இல்லாமற் போகிறதோ பார்ப்போம். பா. அப்படியானல் ஆண்மக்கள் என்றும் பெண்டிர் என் றும் இருவகையாக ஏன் ஸ்வாமி சிருஷ்டித்தார்? பாலா. உங்களைப்போல் என்நேரமும் சச்சரவிட்டுக் கொண்டி ருக்கும் பொருட்டு! (எல்லோரும் நகைக்கின்றனர்.) பா. கைப்பு ஒருபுறம் இருக்கட்டும்-அக்காள். தோன் சொல். என் மதம் என்னவென்ருல், ஆண்பெண் என்று