பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 ஜமீன்தார் வரவு பண்டை போய் ஐயாவுக்கு சொஞ்சம் நல்ல மோராக, ஒரு சுத்தமான பாத்திரத்தில் கொண்டுவா. (ஒரு குழந்தை உள்ளே போய் கொஞ்சம் மோர் கொண்டு வந்து கொடுக்கிறது.) ஜ. அதைச் சாப்பிட்டு விட்டு உம்-உன் கதையை இனி ஆரம்பியம்மா. பொ. என்னவென்முல்-என் புருஷன் ஒரு நாள் சாயங்காலம் கழனியில் வேலை செய்துவிட்டுத் திரும்பி வரும் பொழுது, ஒரு கட்டை வண்டி கொஞ்சம் தாரத்தில் ஒரு புறமாக குடம் கவிழ்ந்திருப்பதைக் கண்டார். உடனே ஓடிப் போய்ப் பார்க்க, அதன் ஒரு பக்கமாக கரையோரம் மல்லாக்காய் வீழ்ந்த ஒரு கிழவி மிகுந்த காயத்துடன் விழுந்து கிடப்பதையும், அவள் பக்கத்தில் இந்த பெண் அழுதுகொண்டு உட்கார்ந்திருப்பதையும் கண்டார். - இவர்களிடம் போய் அந்த அம்மாளே கஷ்டத்துடன் வண்டியில் ஏற்றி இப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு எங்கள் வீடு வந்து சேர்ந்தார். உடனே அந்த அம்மாளுக்கு தாகத்திற்குக் கொடுத்து உபசரித்தோம். பிறகு, நாங்களிருவரும் யோசனை செய்து, வீட்டுக்குள் அவர்களை அழைத்து வந்து படுக்கையில் படுக்க வைத் தோம். அவர்கள் தலையில் பெரியகாயம் பட்டிருந்தது ஒரு வயித்தியரை வரவழைத்துக் காட்டினுேம். எங்க ளால் ஆனமட்டும் சிகிச்சை செய்து பார்த்தோம். ஒன் றும் பிரயோஜனப் படவில்லை. சீக்கிரம் அவர்கள் உயிர் போகும் எனக் கண்டோம். இந்தப் பெண் கன்னி, பாபம், அவளுடைய பாட்டியை விட்டு இரவும் பகலும் பிரியாதிருந்தாள். அவள் அச்சமயம் அழுததைக் கேட் டிருப்பீராயின் உங்கள் மனதைக் கரைத்திருக்கும். இவ ளுக்கு அந்த பாட்டியைத் தவிர வேறு இவ்வுலகில் ஒரு வருமில்லை என்ருள் அந்தப் பாட்டியும் போய் விட் டால் தன் கதி என்னவாகுமென்று கதறிள்ை. கன்னி யின் தாய் தகப்பன்மார் காலமாய் விட்டார்களாம். பிறகு தன் பாட்டியுடன் அந்தம்மாளுடைய பிறந்த