பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழகம்

௪௫

முதலில், தென்புறத்திலும் பிரிவில்லாதிருந்தமை சில சான்றுகளாலறியப்படும்.

“தாப்பிரப்பனே (Tabropane) தலைநிலத்தினின்றும் ஓர் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளது. அதன் வதிநர் 'பழையொ கொனாய்' (Palaiogonoi) என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள்நாடு இந்தியாவினும் மிகுதியாகப் பொன்னும் பெருமுத்தும் விளைவது. தாப்பிரப்பனே இந்தியாவினின்றும், தமக்கிடையோடும் ஓர் ஆற்றினால் பிரிக்கப்படுகின்றது. அதன் ஒரு பாகம் இந்திய இனங்களினும் மிகப் பெரிய காட்டு விலங்கு களும் யானைகளும் நிறைந்தது; அடுத்த பாகம் மக்கள் வதிவது[1] என்று மெகஸ்தனிஸ் (Megasthenes) கூறுகிறார்.

இக் கூற்று, அவர்தம் முன்னோர் கூறியதைக் கொண்டு கூறியதேயாகும். ஏனெனில், அவர் தென்னாட்டிற்கு வர வில்லை, அவர் கூற்றிலுள்ள சில குறிப்புகளால், இலங்கையின் வடபாகம் ஒருகாலத்தில் இந்தியாவொடு சேர்ந்திருந்த தென்றும், தாமிரபணி இலங்கையூடும் ஓடிற்றென்றும், அதனால் இலங்கை தாம்பிரபரணி (Taprobane)யெனப்பட்ட தென்றும் அனுமானிக்க இடமுண்டு. ஆனால், தாமிர பரணியின் தெற்கிலுள்ள தமிழ்நாட்டையே தாப்பிரப்பனே யென்றும், அதற்கு வடக்கிலுள்ள தமிழ்நாட்டை இந்தியா வென்று, பண்டை யவன சரித்திராசிரியர் கூறினர் என்று கொள்ளவும் இடமுண்டு. ஏனெனில், இத்தகைய மயக்குகள் யவனாசிரியர் குறிப்புகளில் பலவுள்ளன. அதோடு, தாப்பிரப்ப னேயிலுள்ளவாகக் கூறப்பட்ட பொருளெல்லாம் பாண்டி நாட்டிலுமிருந்தன.

“வடநாட்டில், வடமொழியிற் பழமைகளை யெழுதிய நூலாசிரியர்கள், இலங்கை இப்போதிருப்பதைவிட மிகப் பெரிதாயிருந்ததாயும், விதப்பாக, மேற்கிலும் தெற்கிலும் மிக அகன்றிருந்ததாயும் கூறியிருக்கின்றனர். இக் கூற்று, புராண காலத்து உண்மையைக் கூறாவிடினும், இந்திய நாடுகளுக்குள் வழங்கிய ஒரு வழிமுறைச் செய்தியைக் குறிப்பிடுகின்ற தாயிருக்கின்றது.

"வடமொழி வானூலார் தங்கள் தலைமை உச்சகத்தை (Chief Meridian) இலங்கையில் வைத்தார்கள். ஆனால், அது இப்போதை இலங்கைக்கு மேற்கிலுள்ள கோடாயிருந்தது. இக் குறிப்புக்கள் தொன்முது காலத்தில் தென்னிந்தியாவும் மடகாஸ்கரும் இணைக்கப்பட்டிருந்தனவென்னும்


  1. ”Foreign Notices of South India,p.41.