பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்க் கால தமிழ்நூல்களும் கலைகளும்

க0க

ஒலியிய லுவண மோங்கிய கொடியினை; வலிமிகு சகட மாற்றிய வடியினை:

இடையெண்

“போரவுணர்க் கடந்தோய்நீ; புணர்மருதம் பிளந்தோய்நீ; நீரகல மளந்தோய்நீ; நிழறிகழைம் படையோய்நீ;

அளவெண்

ஊழிநீ; உலகுநீ; உருவுநீ; அருவுநீ
ஆழிநீ; அருளுநீ; அறமுநீ; மறமுநீ

தனிச்சொல்

எனவாங்கு;

சுரிதகம்

“அடுதிற லொருவநிற் பரவுது மெங்கோன்
றொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற்
கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப்
புயலுறழ் தடக்கைப் போர்வே லச்சுதன்.”

(தோழி தலைவனை வரைவுகடாயது.)

(2) வண்ணக வொத்தாழிசைக்கலி

தரவு

“விளங்குமணிப் பசும்பொன்னின் விசித்தமைத்துக் கதிர்கான்று
துளங்குமணிக் கனைகழற்காற் றுறுமலர் நறும்பைந்தார்
பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்றுங்
குரூஉக்கொண்ட மணிப்பூணோய் குறையிரந்து முன்னாட்கண்
மாயாத வனப்பினையாய் மகிழ்வார்க்கு மல்லார்க்கும்
தாயாகித் தலையளிக்குந் தண்டுறை யூரகேள்;

தாழிசை 1

“காட்சியாற் கலப்பெய்தி யெத்திறத்துங் கதிர்ப்பாகி
மாட்சியாற் றிரியாத மரபொத்தாய் கரவினாற்
பிணிநலம் பெரிதெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழிய
வணிநலந் தனியேவந் தருளுவது மருளாமோ;