௧௦௨
ஒப்பியன் மொழிநூல்
2
"அன்பினா லமிழ்தளைஇ யறிவினாற் பிறிதின்றிப்
பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப்
பெருவரைத்தோ ளருளுதற் கிருளிடைத் தமியையாய்க்
கருவரைத்தோள் கதிர்ப்பிக்குங் காதலுங் காதலோ;
3
"பாங்கனையே வாயிலாப் பலகாலும் வந்தொழுகும்
தேங்காத காவினையுந் தெளியாத விருளிடைக்கட்
குடவரைவேய்த் தோளிணைகள் குளிர்ப்பிப்பான் றமியையாய்த்
தடமலர்த்தா ரருளுநின் றகுதியுந் தகுதியோ;
அராகம்
“தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன
பொழில்;
போதுறு நறுவிரை புதுமலர் தெரிதரு கருநெய்தல் விரிவன கழி;
தீதுறு திறமறு கெனநனி முனிவன துணையொடு பிணைவன
துறை;
மூதுறு மொலிகலி நுரைதரு திரையொடு கடிதொடர் புடையது
கடல்;
நாற்சீரீரடி யம்போதரங்கம்
கொடுந்திற லுடையன சுறவேறு கொட்பதனா லிடுங்கழி யிராவருதல் வேண்டாமென் றிசைத்திலமோ; கருநிறத் துறுதொழிற் கராம்பெரி துடைமையால் இருணிறத் தொருகானி லிராவார லென்றிலமோ ;
நாற்சீரோரடி யம்போதரங்கம்
நாணொடு கழிந்தன்றாற் பெண்ணரசி நலத்தகையே;
துஞ்சலு மொழிந்தன்றாற் றொடித்தோளி தடங்கண்ணே;
அரற்றொடு கழிந்தன்றா லாரிருளு மாயிழைக்கே;
நயப்பொடு கழிந்தன்றா னனவது நன்னுதற்கே;
முச்சீரோரடி யம்போதரங்கம்
அத்திறத்தா லசைந்தன தோள்;அலர்தற்கு மெலிந்தனகண்;
பொய்த்துரையாற் புலர்ந்தது முகம்; பொன்னிறத்தாற் போர்த்
தன முலை;
அழலினா லசைந்தது நகை;அணியினா லொசிந்த திடை;
குழலினா னிமிர்ந்தது முடி;குறையினாற் கோடிற்று நிறை;