பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்க் கால தமிழ் நூல்களும் கலைகளும்

கஉக

வர்ணனைப் பொருளீடுகள் (Descriptive Themes)

குறிஞ்சி,முல்லை (Pastoral),மருதம்,நெய்தல், பாலை என்பன.

போர்ப் பொருளீடுகள் (Martial Themes)

வெட்சி,வஞ்சி,உழிஞை,தும்பை,வாகை முதலியன.

கருதற் பொருளீடுகள் (Reflective Themes)

பெருங்காஞ்சி,முதுகஞ்சி,மறக்காஞ்சி,வஞ்சினக் காஞ்சி,மகட்பாற்காஞ்சி,கையறுநிலை (Elegy) முதலியன.

பாடாண் பொருளீடுகள் (Euology and Doxology)

உலா,கொற்றவள்ளை, இயன்மொழி வாழ்த்து, நால் வகை யாற்றுப்படை, கடவுள் வாழ்த்து முதலியன.

வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ (Didactic.)

புறநிலை வாழ்த்து (Benedictory.)

செய்யுளின் எழுநிலம் (Bases of Poetical Composition)

பாட்டு (Poem or Lyric), உரை (Prose), நூல் (Grammar and Science), வாய்மொழி (Scripture), பிசி (Riddle), அங்கதம் (Satire and Imprecation), முதுசொல் (Proverb) என்பன.

இவற்றுள், உரை பாட்டிடை வைத்த குறிப்பு (Prose interposed in poetry), பாவின்றெழுந்த கிளவி (Commentary), பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி (Fable), பொருளொடு புணர்ந்த நகைமொழி (Wits and Humour) என நால் வகைப்படும்.

நூல்வகை (Different Kinds of Poems)

பண்ணத்தி -பாட்டும் உரையும் கலந்த ஒருவகை நூல்.

எண் வனப்பு

அம்மை (Sonnet), அழகு (Poem with proper diction), தொன்மை (Legend in mixed prose & verse), தோல் (Epic),