பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தபம் - தபஸ் (வ). ஒ.நோ : மனம்-மனஸ் (வ.).

தவத்திற்குரிய எண்கூறுகள் இயமம், நியமம், ஆசனம், வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைதல், சமாதி எனக் கூறுவர் நச்சினார்க்கினியர்.

இவற்றுள் முதல் மூன்றும் கடையொன்றும் வடசொற்கள். இவற்றுக்குப் பதிலாகக், கடிவு, நோன்பு, இருக்கை, கலத்தல் என்பவற்றை முறையே வைத்துக்கொள்ளலாம். பிற்காலத்தார் எண்ணுறுப்புக்களையும் வடசொற்களாலேயே கூறுவர். பொருட்டொகைகளை முதலிலிருந்து கவனித்துக் கொண்டே வந்தால், தொல்காப்பியர் காலத்தில் இரண்டொரு வட சொற்களே தோன்றிப் பின்பு வரவர மிக்குத் தற்காலத்தில், பொருட்பாகுபாடுகளெல்லாம் ஆரியமோ என்று மயங்கும்படியாயிருப்பது தோன்றும்.

தவத்திற்குரிய எண்ணுறுப்புக்களில் வளிநிலை மிக முக்கியமானது. இதைப் பிராணாயாமம் என்பர் வடநூலார்.

உண்மூச்சு, வெளிமூச்சு என்னும் இருவகை மூச்சுக்களில் முன்னது ஒரு மடங்கும் பின்னது ஒன்றரை மடங்குமாகும். இவ் விரண்டையும் சமமாக்கிவிட்டால் வாழ்நாள் நீடிக்கும் என்பது முன்னோர் கருத்து. அங்ஙனம் சமமாக்கி இருவகை மூச்சுக்களையும் நிகழ்த்தும்போதே, கடவுள் பெயரான சிவ என்னும் ஈரெழுத்துகளையும் மந்திரமாக வொலித்துக்கொள்ளும்படியான முறையையும் அவர்கள் வகுத்தார்கள். இயல்பாகக் குறுகியும் நீண்டுமிருக்கின்ற உண்மூச்சு வெளிமூச்சுகள், குறிலும் நெடிலுமாகவுள்ள 'சிவா' என்னும் விளிப்பெயர் போல்வ வென்றும். அவற்றைச் 'சிவ' என்னும் விளி வடிவை யொக்குமாறு சமப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும், அவ் விருவகை மூச்சுக்களையும் 'சிவ' என்னும் ஈரெழுத்தொவிகளாகக்கருதுவதுடன், அவ் வொவிகளாகவே அம் மூச்சுக்களைப் புறத்தார்க்குப் புலனாகாதபடி மெல்லிதாய் உயிர்க்க வேண்டுமென்றும், அதனால் உடலுக்கு இளமையும் ஆன்மாவிற்கு வீடுபேறும் கிட்டும் என்றும் முன்னோர் கொண்டனர். இவற்றை,

“கூட மெடுத்துக் குடிபுக்க மங்கைய
ரோடுவர் மீளுவர் பன்னிரண் டங்குல
நீடுவ ரெண்விரற் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிற்கோல வஞ்செழுத் தாமே”


“வளியினை வாங்கி வயத்தி லடக்கிற்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்”