௧௩௬
ஒப்பியன் மொழிநூல்
பேரெண்கட்குத் தனிப்பெயரில்லை. இதனால், அதற்குமேல் தமிழர்க்கு எண்ணத் தெரியாதென்று கொள்ளற்க. ஆயிரம், நூறு, பத்து என்னும் எண்ணுப்பெயர்களையே உறழ்ந்து, இலக்கத்தை நூறாயிரமென்றும் பத்திலக்கத்தைப் பத்துநூறாயிரமென்றும், கோடியை நூறு நூறாயிரமென்றும் கூறினர் என்றே கொள்ளப்படும். தொல்காப்பியத்தில் பதினூறாயிரம் வரை கூறப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும், hundred thousand, two hundred million என்று இன்றும் கூறுதல் காண்க.
இலக்கம் (லக்ஷம், Sans., lakh, Eng.), கோடி (கோட்டி, Sans., crore, Eng.) என்னும் பெயர்கள் பிற்காலத்தனவாயிருக்கலாம். ஆனால், அவை இந்தியாவினின்றே தோன்றினதாகத் தெரிகின்றது. கோடி என்று தமிழிலும், குடோடு என்று இந்துஸ்தானியிலும், குரோர் (crore) என்று ஆங்கிலத்திலும் வழங்குதல் காண்க.
இலக்கம் கோடியென்பன தமிழ்ப் பெயர்களாயின், முறையே, பெரிய இலக்கம் (எண்) என்றும், கடைசியெண் என்றும் பொருள் படுவனவாகும். இவற்றுள் இலக்கம் முன்னும் கோடி பின்னும் தோன்றினவென்பதை, ஆயிரப்பத்து பத்தாயிரம், பத்தாயிரப்பத்து நூறாயிரம், நூறாயிரப்பத்து பத்து நூறாயிரம், பத்து நூறாயிரப்பத்து பத்திலக்கங்கோடி (பத்திலக்கம் அல்லது கோடி) என்னும் எண்சுவடி வாய்பாட்டால் அறியலாம்.
பண்டைத் தமிழர் கணிதத்தில் மிகச் சிறந்தவர் என்பதற்குச் சான்றாக இரண்டோர் அளவை வாய்பாடுகளை இங்குக் குறிக்கின்றேன்.
கீழ்வாயிலக்க வாய்பாடு1
1/2, 3238245,3022720,0000000 -
தேர்த்துகள்
61/2
=
1 நுண்மணல்
1/3575114,6618880,0000000 -
நுண்மணல்
100
=
1 வெள்ளம்
1/35751,1466188,8000000 -
வெள்ளம்
60
=
1 குரல்வளைப்பிடி
1/595,8524436,4800000 -
குரல்வளைப்பிடி
40
=
1 கதிர்முனை
1/14,8963110,9120000 -
கதிர்முனை
20
=
1 சிந்தை
1/7448155,5456000 -
சிந்தை
14
=
1 நாகவிந்தம்