பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

௧௪௩

“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி” (எச். 4)


“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”

என்றும், அறுவகைத் திரிபுகளும் (எச். 7), மூவகைக் குறைக ளும் (எச். 57) வினை பயன் மெய் உரு என்ற நால்வகை யுவமங்கட்கு வெவ்வேறுருபுகளும் (உவ. 12—6) கூறியிருப்ப தாலும், பிறவற்றாலும், பண்டைத் தமிழர்க்குச் சொல்லிய லுணர்ச்சியிருந்தமை யறியப்படும். மொழிநூற்குமுற்படியானது சொல்லியலே. ஒரு மொழிபற்றியது சொல்லியலும் பல மொழிபற்றியது மொழிநூலுமாகுமென்றறிக.

தருக்கநூல்— Logic

தருக்குதல் ஒருவன் தன்னை மிகுத்துக்காட்டுதல். “தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து” என்று தொல்காப்பியத்திலேயே (அகத். 53) வந்திருத்தல் காண்க. தருக்கு — செருக்கு. த—ச, அ—எ, போலிகள். (ஒ.நோ : ஓதை — ஓசை, சத்தான் — செத்தான்.)

தருக்கு + அம் = தருக்கம். தருக்கத்திற்கு ஏரணம் என்றும் பெயருண்டு. ஏர் + அணம் = ஏரணம். ஏரணம் எழுச்சி. தருக்கம் என்னும் தென்சொல்லையே, தர்க்கம் என்று எழுதி வடசொல்லாகக் காட்டுவர் ஆரியர்.

தருக்கம் என்பது ஒரு சொற்போர். ஒருவன் தன் கொள்கையை நாட்டி எதிரியை வெல்வதே தருக்கம். வெல்வதெல்லாம் வாகை. வாகைப் பொதுவிலக்கணமாவது.

“தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல்.” (தொ. புறத். 15)

அகத்தியத் தருக்க நூற்பாக்கள்

கீழ்வரும் நூற்பாக்கள் தருக்கப் புலவர் வடிவேல் செட்டியார் பதிப்பித்த 'தர்க்க பரிபாஷை' என்னும் நூலிறுதியிற் கண்டவை. இவை உண்மையில் அகத்தியர் இயற்றியவையாயின், தொல்காப்பியர் காலத்தில் தருக்க நூலுந் தமிழிலிருந்தமை யறியப்படும்.